இணையதளத்தில் பல யுடியூப் சேனல்கள் இதுகுறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யுடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரிடம் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன், தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி பல்வேறு பொய்யான தகவலையும் மற்றும் சங்கதிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். இவர்கள் மீதும் பல யுடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சமூக வளைத்தளங்களில் உள்ள வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இவ்வழக்கு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
The post யுடியூபில் தவறான தகவல் பரப்பும் பயில்வான் ரங்கநாதன் மீது கருணாஸ் புகார் appeared first on Dinakaran.