அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டாஸ்மாக் மாவட்டத்தில் 108 கடைகள், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டத்தில் 83 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 பேரும் கூடுதல் விலைக்கு மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 10 சேல்ஸ்மேன்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கூடுதல் விலைக்கு மது விற்பனை 10 சேல்ஸ்மேன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.