மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மற்ற மலைப்பகுதிகளில் படிப்படியாக திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்து வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்து வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நடத்துநர், ஓட்டுநர் மீது துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது .

The post மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: