கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூங்காக்களில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் மூடப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய மற்றும் பெர்ன் புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
The post பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல் appeared first on Dinakaran.