சென்னை: அதிமுக உடன் மறைமுகமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 தொகுதிகளில் பாஜகவும் மீதமுள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கும் வழங்க திட்டம். தற்போது வரை புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் உள்ளன.