மதகடிப்பட்டு பிரெஞ்சு வாய்க்காலில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

*தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

திருபுவனை : புதுச்சேரி மதகடிப்பட்டில் இருந்து திருவாண்டார்கோவில் வரை பிரெஞ்சு வாய்க்கால் 5 கி.மீ தூரத்திற்கு உள்ளது. மழைக்காலங்களில் இந்த வாயக்கால் வழியாக பல்வேறு ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப்பதால் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிரம்பி வாய்க்கால் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு, உடனடியாக அப்பகுதியினை பார்வையிட்டு வாய்க்கால் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளை அகற்றி நீர்வழிப் பாதையை உருவாக்கிட அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மதகடிப்பட்டு பிரெஞ்சு வாய்க்காலில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் appeared first on Dinakaran.

Related Stories: