ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மக்கள் நீதி மய்யம்.. ஜனநாயகத் தேரை அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும்: கமல்ஹாசன் பதிவு!!

சென்னை: ஜனநாயக தேரை அனைவருமே சேர்ந்துதான் இழுக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க நாளான இன்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.

மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது. என்று கூறியுள்ளார்.

 

The post ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மக்கள் நீதி மய்யம்.. ஜனநாயகத் தேரை அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும்: கமல்ஹாசன் பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: