அங்கித் திவாரி வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து விசாரணை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி சிறையில் உள்ள மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.குமரப்பன் ஆகியோர் முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தின் தடை உள்ளது. அந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகே எந்த முடிவுக்கும் வரமுடியும். எனவே, இந்த மனுவிற்கு விசாரணை எண் வழங்கலாம். உச்சநீதிமன்ற வழக்கு முடிவை பொறுத்து விசாரணைக்கு பட்டியலிடப்படும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post அங்கித் திவாரி வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து விசாரணை ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: