இதுபோல் அண்ணாமலை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்புக்குள்ளாகினர். குரோம்பேட்டை பேருந்து நிலையம் முதல் பல்லாவரம் பகுதி வரை சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்கள், பாஜ கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குறைந்த எண்ணிக்கையில் கட்சியினர் இருந்ததால் சிறிது நேரம் பேசிவிட்டு அண்ணாமலை காரில் புறப்பட்டு சென்றார்.
The post அண்ணாமலை நிகழ்ச்சிக்காக நடைபாதை, கடைகளை மறைத்தபடி பிளக்ஸ் பேனர்; வியாபாரிகள் பாதிப்பு appeared first on Dinakaran.