தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத் துறையினால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசுத் திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும். மேலும், வேளாண் உற்பத்திக்கு விதையே முக்கிய இடுபொருள் என்பதால், பயறு வகைகள் எண்ணெய்வித்துகளில், 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைப்பதற்கு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்குத் தேவையான பயிற்சியும், ஆதார விதைகளும் வேளாண்மைத்துறை வழங்குவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த விதைகளை, உற்பத்தி மானியம் வழங்கி வேளாண்மைத் துறையே கொள்முதல் செய்து, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.
The post விதை உற்பத்தி செய்திட பண்ணை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடி மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.