இவர்தான் வேட்பாளரு… பிடிங்க சேலையை: எடப்பாடிக்கே தெரியாம அறிவிச்சுட்டாங்க அதிமுகவினர் லக…லக…

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வாழவந்திநாடு ஊராட்சி, ஊர்புரம் எடப்புலி நாடு ஊராட்சி, செங்கரை ஆகிய இடங்களில், மலைவாழ் மக்கள் கலாச்சார விழா என்ற பெயரில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இருந்த அதிமுகவினர், இவர் தான் வருகிற நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் என சொல்லி, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களிடம், ‘வாங்கிக்கோங்கம்மா சேலையை’ என தெரிவித்தனர். என்னது வேட்பாளரா… அதுக்குள்ள சொல்லிட்டாங்களா… என்ற அதிர்ச்சியுடன் பெண்கள் சேலையை வாங்கிக்கொண்டனர். அதிமுகவிடன் யார் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதே இதுவரை தெரியவில்லை. அதேபோல அதிமுக சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள் அச்சப்பட்டு ஜகா வாங்குவதால் ஒவ்வொருவருக்கும் உதவியாளர் மூலம் போன் போட்டு தேர்தலில் நில்லுங்க என்று எடப்பாடி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், அதிமுக சார்பில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே, தமிழ்மணி தான் வேட்பாளர் என அதிமுகவினர் லட்சக்கணக்கில் செலவு செய்து, கூட்டத்தினரை அழைத்து வந்து, 2 இடங்களில் கலாச்சார விழாவை நடத்தி உள்ளனர். இதற்கான செலவை தமிழ்மணிதான் செய்ததாக கூறப்படுகிறது.

The post இவர்தான் வேட்பாளரு… பிடிங்க சேலையை: எடப்பாடிக்கே தெரியாம அறிவிச்சுட்டாங்க அதிமுகவினர் லக…லக… appeared first on Dinakaran.

Related Stories: