ஆனால், காவல்துறையில் மட்டும் இந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவலராக பணியில் சேருபவர் காவலராகவே பணி ஓய்வு பெறுவது கொடுமை. இது மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அன்புமணி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை எஸ்ஐ ஆக பதவி உயர்த்த அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.