திருவள்ளூர் நகராட்சி பாரதியார் நகரில் ரூ.24 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட பூங்கா: எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி, 24வது வார்டு பாரதியார் நகரில் நமக்கு நாமே திட்டம் 2022 – 23ன் கீழ் பூங்காவை பெடரல் வங்கி சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் மற்றும் நகராட்சி நிதி ரூ.18 லட்சம் என மொத்தம் ரூ.24 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுபாஷினி, பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரூ.24 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர் நேதாஜி, விஜயகுமார், மதுசூதனன், நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரவி, பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், சிவக்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், நீலாவதி பன்னீர் செல்வம், பிரபாகரன், அயூப் அலி, செல்வகுமார், கந்தசாமி, விஜயகுமார், தனலட்சுமி சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் நகராட்சி பாரதியார் நகரில் ரூ.24 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட பூங்கா: எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: