தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியல் கல்லூரியின் உயிர் மருத்துவத்துறை சார்பில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டி.ஏ.ஐ.ஆர்.ஐ நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் ஆகாஷ் கலந்துகொண்டு பேசுகையில், புற்றுநோய் வருமுன் எப்படி காப்பது, புற்றுநோயின் அறிகுறிகளை எப்படி தெரிந்துகொள்வது, புற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகளை எப்படி அணுகுவது, புற்றுநோயில் இருந்து முழுவதும் விடுபட உயர் மருத்துவ சிகிச்சையை எப்படி எதிர்கொள்வது மற்றும் ஸ்டெம் செலின் பற்றிய முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார். நிகழ்வின்போது, பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: