சென்னையில் வங்கி மேலாளரிடம் இருந்து நகையை பறித்த நபர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளர் ரேவதியிடம் இருந்து நகை பறித்தவர் நபர் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது ரேவதி அணிந்திருந்த 6 சவரன் நகை மர்ம நபரால் பறிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு நகை பறிப்பில் ஈடுபட்ட பெலிக்ஸ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் வங்கி மேலாளரிடம் இருந்து நகையை பறித்த நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: