சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின எனவும் தெரிவிக்கப்படுகிறது. அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
The post விருதுநகர் அருகே சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு.! 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.