சங்கரன்கோவில் ஏவிகே பள்ளியில் பட்டமளிப்பு விழா

செங்கோட்டை, பிப்.17: சங்கரன்கோவில் ஏவிகே சிபிஎஸ்இ பள்ளியில் 13வது பட்டமளிப்பு விழா ஏவிகே கல்வி குழும தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ஹரிணி மீடியா லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் நளினா ராமலட்சுமி கலந்து கொண்டார். பள்ளி தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் சேகர் குமார் முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை மழலை பள்ளி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்தார். மழலை பள்ளி ஆசிரியர் மிஷேல் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (பிப்.17) ஏவிகே சிபிஎஸ்இ பள்ளி மற்றும் ஷேக்ஸ்பியர் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் ஸ்டடீஸ் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான ஆங்கிலத் திறனாய்வு தேர்வு பள்ளி ஆடிட்டோரியத்தில் வைத்து பள்ளி தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன் தலைமையில் நடைபெறுகிறது.

The post சங்கரன்கோவில் ஏவிகே பள்ளியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: