இதைத் தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க கோயில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவ விழாவின் முதல் நாளான நேற்று குளத்தை தம்பதி சமேதராக ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
The post உத்திரமேரூரில் தெப்போற்சவ விழா appeared first on Dinakaran.