இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், தனது பதவி போதையில் ஒன்றிய பாஜக அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆழமான தாக்குதல்.அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பாஜக வசூலித்த பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ஆனால், நாங்கள் Crowd Funding முறையில் திரட்டிய பணத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் எதிர்காலத்தில் தேர்தலே நடைபெறாது என கூறினேன்.நாட்டில் உள்ள பல கட்சி முறையை நீதித்துறை காப்பாற்ற வேண்டும். இந்த சர்வாதிகாரத்திற்கும், அநீதிக்கும் எதிராக வீதிகளில் இறங்கி போராடுவோம்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகம் மீதான ஆழமான தாக்குதல்.: மல்லிகார்ஜுன கார்கே காட்டம் appeared first on Dinakaran.