அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவர்களையும் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இதற்கிடையே இன்று காலை 2 மாணவர்களின் உடல்களும் வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மிதப்பதாக தகவல் தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 2 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் குளித்தபோது 2 பேரும் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
The post ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.