கல்லூரி மாணவரின் பைக் திருட்டு

மல்லசமுத்திரம், பிப். 16: மல்லசமுத்திரம் அருகில் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த கல்லூரி மாணவரின் ரேஸ் பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், நமச்சிவாயபுரம் அருகில் தொட்டியம் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோதிவேல்(45). இவரது மகன் அகிலன்(19). மல்லசமுத்திரம் அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., முதலாமாண்டு படித்து வருகிறார். சூரியகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேி கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை 5 மணியளவில் அவர் தனது ரேஸ் பைக்கை வீட்டின் முன்பாக நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது, ரேஸ் பைக் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அகிலன் அளித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,ரஞ்சித்குமார் வழக்குபதிவு செய்து, காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவரின் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: