கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரி துணை தாசில்தார் கோகுலக்கண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை மூங்கில் புதூர் கூட்ரோடு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை செய்தனர். அதில், இரண்டு யூனிட் வேலி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. பின்னர் அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: