நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

கொள்ளிடம்: கடலூர் மாவட்டம் கிள்ளை பில்லுமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்வீரன் (50), மனைவி நதியா (40), மகள்கள் பிரதிஷா (17), பிரதிக் ஷா (4) ஆகியோருடன் கொள்ளிடம் அருகே பழையாறு சுனாமி நகரில் குடும்பத்துடன் தங்கி கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை செந்தில்வீரன், தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த குறள்மணி (47) என்பவருடன் கடலுக்கு சென்றார்.

பின்னர் மீன்பிடித்து விட்டு மாலை பழையாறு துறைமுகத்துக்கு முகத்துவாரத்தின் வழியே திரும்பி கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால் ராட்சத அலையில் சிக்கி படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் கடலில் தவறி விழுந்த செந்தில்வீரன் அலையில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

The post நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: