14 பேர் பட்டியலை வெளியிட்ட பாஜக; மீண்டும் எம்பியாகும் நடிகை ஜெயாபச்சன்?.. திரிணாமுல் சார்பில் பெண் பத்திரிகையாளர் போட்டி

லக்னோ: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான 14 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில், மீண்டும் நடிகை ஜெயாபச்சன் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. பாஜக தரப்பில் நேற்று 14 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.என்.சிங், அரியானா பாஜக முன்னாள் தலைவர் சுபாஷ் பராலா உள்ளிட்ேடார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

மேற்குவங்கத்தில் பத்திரிகையாளர் சகரிகா கோஷ், முன்னாள் எம்பி சுஷ்மிதா தேவ் (காங்கிரசில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு வந்தவர்) உள்ளிட்ட 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள ஒரு இடத்தில் பாஜக சார்பில் சாமிக் பட்டாச்சார்யா போட்டியிடுகிறது. ஏற்கனவே இந்த ஒரு இடம் காங்கிரசிடம் இருந்தது. தற்போது அந்த இடம் பாஜகவுக்கு செல்கிறது.

பாலிவுட் நடிகை ஜெயா பச்சன், சமாஜ்வாதி கட்சியின் பிரதிநிதியாக மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக வாய்ப்புள்ளது. அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post 14 பேர் பட்டியலை வெளியிட்ட பாஜக; மீண்டும் எம்பியாகும் நடிகை ஜெயாபச்சன்?.. திரிணாமுல் சார்பில் பெண் பத்திரிகையாளர் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: