இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர்: இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஃபாரூக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். வழிப்பாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவதை கைவிட வேண்டும்.

மேலும் பன்முகத்தன்மை கொண்ட உலகிலேயே சிறந்த இந்தியாவின் பன்முகத்தன்மை மாறாமல் ஆட்சி செய்ய வேண்டும். ஞானவாபி மசூதி விகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட துணைதுணை செயலாளர் ஜாஃபர் நன்றி கூறினர்.

The post இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: