ஒண்டிகுப்பம் திமுக கிளை செயற்குழு கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெங்கத்தூர் ஊராட்சி, ஒண்டிகுப்பம் கிளை திமுக செயற்குழு கூட்டம் மற்றும் இல்லம் தோறும் கொடியேற்று விழா மூத்த முன்னோடி கே.என்.அர்ஜூணன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் மதியழகன் அனைவரையும் வரவேற்றார். மாநில நிர்வாகி ஆதிசேசன், ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜசேகர், நாகராஜ், அர்ஜூணன், செங்குட்டுவன், குமரன், கொப்பூர் திலிப்குமார், தாடி நந்தகோபால், ராஜேந்திரகுமார், ஊராட்சி தலைவர் மோகன சுந்தரம், துணைத் தலைவர் டில்லி, சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் இல்லம் தோறும் திமுக கொடியேற்றும் திட்டத்தின் படி திமுக கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். அப்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.இதில் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், சேகர், ராமதாஸ், சேகர், வாசு, பாபு, முத்து, அருண்குமார், பஞ்சாட்சாரம், உஷா நந்தினி, பாலசுப்பிரமணியம், எல்லப்பன் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒண்டிகுப்பம் திமுக கிளை செயற்குழு கூட்டம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: