மேலும், 20ம் தேதி முன் பண மானிய கோரிக்கையும், 21ம் தேதி முன் பண செலவின கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளன. கடந்தாண்டு ஆளுநர் உரையின் போது அரசு தயாரித்த உரையில் சில பத்திகளை வாசிக்காமல், சில வரிகளை சேர்த்தும் வாசித்தார். உடனடியாக ஆளுநர் தானாக சேர்த்த பகுதி அவை குறிப்பில் இடம் பெற கூடாது என்றும், அரசின் சார்பில் தயாரித்து சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல, இந்தாண்டும், ஆளுநருக்கு அரசு தரப்பில் உரை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் வாசிப்பாரா? அல்லது கடந்த முறை போல் அரசியலமைப்பு சட்டத்தை மீறி சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா என்பது நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரியவரும். இந்தாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் தலைமைச்செயலகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பேரவையின் மண்டபத்தில் ஒரு சில இடங்களில் முன்பு வைக்கப்பட்டிருந்த திரையை விட அகன்ற திரைகள் வைக்கப்பட்டு உள்ளன. முதல் கூட்டத்தொடர் என்பதால் எதிர்க்கட்சிகள் சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பான கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதற்கு தகுந்த பதிலை அளிக்க அமைச்சர்களும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவை கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை 19ம் தேதி தாக்கல் appeared first on Dinakaran.