உங்கள் வீட்டிற்கே வருகிறேன் சுட்டுக்கொல்ல தயாரா டிகே சுரேஷ் கேள்வி ஈஸ்வரப்பா பேச்சு குறித்து எம்பி டி.கே.சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒன்றிய அரசு தென்மாநிலங்களை புறக்கணித்தால், தனி நாடு கோரிக்கை எழுப்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கருத்து தெரிவித்தேன். இதிலிருந்து நான் பின்வாங்குவதில்லை. அதே சமயத்தில் நான் கூறியது தேச துரோகமான கருத்தும் கிடையாது. நான் இப்படி பேசியதால், என்னை கொலை செய்ய வேண்டும் என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார். நான் அவர் வீட்டிற்கு செல்கிறேன். தைரியம் இருந்தால், சுட்டு கொல்லட்டும் பார்க்கலாம். வேறு யாரும் என்னை ஏன் சுட வேண்டும்? நீங்கள் (ஈஸ்வரப்பா) எனக்கு நேரம் கொடுத்தால், கன்னடர்களின் நலனுக்காக நான் உங்கள் முன் நிற்பேன். நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன். விரைவில் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு ஒரு வாரத்தில் உங்களைச் சந்திப்பேன். என்னைச் சுட விரும்பினாலும் தயாராக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
The post நிதி ஒதுக்கீட்டில் தென்மாநில புறக்கணிப்பு பிரச்னை கர்நாடகாவில் பா.ஜ-காங்கிரஸ் மோதல் appeared first on Dinakaran.