மீண்டும் ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தாலோ, புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றிபெற்றாலோ புதுவையின் யூனியன் பிரதேச அந்தஸ்து குறைந்துவிடும். முதல்வர் பதவியே இருக்காது. முதல்வர் ரங்கசாமி நகராட்சி மேயராகிவிடுவார். மாநில அரசுகளை ஒன்றிய பாஜ அரசு, நசுக்கி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பாஜ சிதைக்கிறது. மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கையை முதல்வர் ரங்கசாமி எடுத்தார்?. அவர் வாய் சவடால் விட்டு, புதுவை மக்களை ஏமாற்றி வருகிறார்.ஒன்றிய அரசு மனது வைத்திருந்தால் நிதிக்குழுவில், புதுச்சேரியை சேர்த்திருக்கலாம். நிதிக்காக ஒன்றிய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘ஓபிஎஸ் சகாப்தம் முடிந்துவிட்டது, அவர் ஒரு காலி பெருங்காய டப்பா. அவரது பேச்சை காதில் வாங்க வேண்டியதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்,’ என்றார்.
The post ஓபிஎஸ் ஒரு காலி பெருங்காய டப்பா…: சி.வி. சண்முகம் தாக்கு appeared first on Dinakaran.