மண்டபம், பிப். 10: மண்டபம் ஒன்றியத்தில் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மண்டபம் ஒன்றியம் இருமேனி, புதுமடம், தங்கச்சிமடம் ஊராட்சி மற்றும் வாணியங்குளம் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.6.14 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.
ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவக்குமார் (இருமேனி), காமில் உசேன் (புதுமடம்), குயின்மேரி (தங்கச்சிமடம்), திமுக மண்டபம் ஒன்றிய மத்திய அவைத்தலைவர் நாகராஜன் மற்றும் கல்வி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்து கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணைத் தலைவர் பகவதி லட்சுமி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மண்டபம் ஒன்றியத்தில் ரூ.6.74 கோடியில் வகுப்பறைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: பூமிபூஜையில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.