11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் திட்டத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

கோவை, பிப்.9: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் படி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோவை சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஐஐடி மெட்ராஸ் திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம் ஆகியவற்றை மாணவ மாணவிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1751க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் திட்டத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: