தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன் என்று வினா எழுப்பியிருந்தது. இதற்கு பிறகாவது நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சு நடத்த வேண்டும். கைதான அனைத்து மீனவர்களையும், அனைத்து படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது இலங்கை அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.