அந்த நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சில பள்ளிகளில் மாதாந்திர தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி மேற்கு அண்ணாநகரில் உள்ள பிரபல பள்ளியில் இருந்து காவல்துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தெரிவிக்கப்பட்டது. போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அந்தபள்ளிக்கு சென்று சோதனை நடத்தினர். அடுத்த 10 நிமிடத்தில் முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இருந்து மிரட்டல் வந்திருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு அடுத்தடுத்து 13 பள்ளிகளில் இருந்து காவல்துறைக்கு வெடி குண்டு மிரட்டல் புகார் வந்தது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக போலீசாரும் ஆசிரியர்களும் அனைத்து மாணவ, மாணவிகளையும் உடமைகளுடன் பத்திரமாக விளையாட்டு மைதானத்தில் நிறுத்தினர். வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல், ‘மின்னல் வேகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியது.’ இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு அந்தந்த பள்ளிகள் முன்பு குவிந்தனர். இதனால் பதற்றமான நிலை காணப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சோதனையில் ஒரு வெடி குண்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் இது வெறும் புரளி எனதெரியவந்தது.
* ஜி-மெயில் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் கடிதம்
சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஜி-மெயில் விடுத்துள்ளார். ஆனால் மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி-மெயில் முகவரி தனி நபருக்கான முகவரியில் இருந்து வரவில்லை. அது ஒரு சர்வீஸ் மெயில் மூலம் வந்துள்ளது. எனவே மிரட்டல் விடுத்த நபர் குறித்து தகவல்களை ஜி-மெயில் நிறுவனத்திடம் இருந்து பெற சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மிரட்டல் விடுத்த நபரின் ஐடி மற்றும் முகவரி, தொடர்பு எண் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்ததும் உடனே கைது நடவடிக்கை இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post சென்னையில் பிரபலமான 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள் குவிந்ததால் பதற்றம்; மின்அஞ்சல் அனுப்பியவருக்கு வலை appeared first on Dinakaran.