அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிடப் போவதாக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, இன்று மோடி அரசின் 10 ஆண்டு காலத்தில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான ‘கருப்பு அறிக்கை’-யை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எதிர்கட்சிகளை சேர்ந்த 411 எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது. அவர்கள் ஜனநாயகத்தை அழித்துக் கொண்டுள்ளனர்’ என்றார்.
The post மோடி அரசின் 10 ஆண்டுகால துயரம்; ‘கருப்பு அறிக்கை’ வெளியிட்ட கார்கே: ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி appeared first on Dinakaran.