இருப்பினும் நேற்று முன்தினம் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1000யை முருகானந்தத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார், முருகானந்தத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராஜலிங்கம், வழக்கை விசாரித்து வருகிற 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post கரூர் அருகே மின் இணைப்பை மாற்ற ரூ.1000 லஞ்சம் வாங்கிய போர்மேன் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.