நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்தது. இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார். கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த சின்ன விஷயத்தை ஏன் பெரிதாக்கினார்கள் என புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
The post பாத யாத்திரையில் கூட்டத்தை கண்டு நாய் நடுங்கியதால், உரிமையாளரிடம் தந்து நாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்: நாய் பிஸ்கட் விவகாரத்தில் ராகுல் காந்தி விளக்கம் appeared first on Dinakaran.