கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூரில் சிதலமடைந்த மின் கம்பம்

 

கிருஷ்ணராயபுரம்,பிப்.6: கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூரில் சிதலமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சித்தலவாய் ஊராட்சியில் கீழ முனையனூர் பகுதியில் எச்.டி லைன் மின் கம்பம் சிதலமடைந்துள்ளதால் அப்பகுதி இருளில் மூழ்கும் நிலை உள்ளது. ஆகையால் மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிதலமடைந்த மின்கம்பத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூரில் சிதலமடைந்த மின் கம்பம் appeared first on Dinakaran.

Related Stories: