மது விற்ற 4 பேர் கைது

 

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.5: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிநாதம்பட்டி சின்னாங்குப்பம் பகுதியில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கோபிநாதம்பட்டியை சேர்ந்த செல்வி(70), ஏழுமலை(47), மதியழகன்(48) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 80மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல், சின்னாங்குப்பம் பகுதியில் மது விற்ற தனசேகரன்(39) என்பவரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

The post மது விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: