நாமக்கல்லில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி

 

நாமக்கல் பிப்.4:நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அண்ணாவின் 55 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதிப்பேரணி நேற்று நடைபெற்றது. பேரணிக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி தலைமை வகித்தார். இந்த பேரணி நேதாஜி சிலையிலிருந்து துவங்கி மணிக்கூண்டு வழியாக மோகனூர் சாலையை வந்தடைந்தது. இதையடுத்து, மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ராஜேஸ்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இப்பேரணியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச்செயலாளர் கைலாசம், மாவட்ட அவை தலைவர் மணிமாறன், நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், நகர்மன்ற தலைவர் கலாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், பவித்திரம்கண்ணன், தலைமைகழக பேச்சாளர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணி, சார்பு அணி நிர்வாகிகள் முரளி, ராஜவேல், கிருபாகரன், கடல்அரசன்கார்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி appeared first on Dinakaran.

Related Stories: