கோவை‌ மாநகர்‌ மாவட்டகாங். வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை, பிப். 4: கோவை‌ மாநகர்‌ மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பதவி ஏற்பு அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி, புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஜெரோம்‌ ஜோசப், மாநில வழக்கறிஞர் அணி பொதுச்செயலாளர் மதனசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர்கள் ஷமீம், மகேந்திரன், கணேசன், பொதுச்செயலாளர்கள் பர்கத்துல்லா, சம்பத்குமார், ஸ்டெபினா, செயலாளர்கள் சித்ரா, ராஜாமணிகண்டன், சக்திவேல்‌, முத்து‌, பாலாஜி பொருளாளர் சசிரேகா, மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் தமிழ்செல்வன், காந்தகுமார், அஸ்மத்துல்லா, ரிஸ்வான், சச்சின் சிவக்குமார், முருகன்‌ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவை‌ மாநகர்‌ மாவட்டகாங். வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: