கழிவு நீரின் இணைப்பை பாதாள சாக்கடையில் இணைத்தால் பாதாள சாக்கடை முழுவதும் நிரம்பி, வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்குச் செல்லும் கழிவுநீர் மீண்டும் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பள்ளம் தோண்டி பைப் லைன் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி, தொல்லியல் துறை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, 7வது வார்டு பொதுமக்கள் 40க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அங்கு நுழைவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேரூராட்சி அலுவகத்தில் மனு கொடுத்து விட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
The post கடற்கரை கோயில் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.