ஏற்கனவே நாங்கள் சொல்லியபடி, நானும் டிடிவி தினகரனும் இணைந்து தான் பணியாற்றிக் கொண்டுள்ளோம். சசிகலா இணைந்து பணி செய்வாரா என்பதை அவரிடன் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சிஏஏ சட்டம் நிறைவேற முக்கிய காரணமே அதிமுகதான். 2019ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் இருக்கும்போதுதான் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் அளித்த ஆதரவால்தான் சிஏஏ சட்டம் நிறைவேறியது. இதேபோல் மக்களவையில் இருந்த எம்பியாக இருக்கும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு அளித்திருந்தார். ஆனால், தற்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்பை அதிமுக அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதேபோல், ஓபிஎஸ்சும் எடப்பாடியை போய் கேளுங்கள் என்று எஸ்கேப்பாகிறார்.
The post சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலி எடப்பாடியை கேளுங்கள்: ஓன்றுமே தெரியாதது போல் பேசும் ஓபிஎஸ் appeared first on Dinakaran.