அந்த மனுக்களை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவை தள்ளுபடி செய்தது. அங்கித் திவாரிக்கு வரும் பிப்ரவரி 7ம் தேதி வரையில் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2 வது முறையாக ஜாமின் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் இந்த ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 5க்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post ED அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு: பிப்.5-க்கு ஒத்திவைத்தது திண்டுக்கல் நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.