சென்னை மேற்கு மாம்பலத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் மீது தாக்குதல்..!!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் (59) மீது மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது அசோக் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலராக பதவியேsற்ற ராஜேஸ்வரியை வாழ்த்தி வாட்ஸ்அப் குரூப்பில் சிலர் பதிவிட்டிருந்தனர். வாட்ஸ்அப் குரூப்பில் ராஜேஸ்வரியை கிண்டல் செய்யும் விதமாக வெங்கடேசன் பதிவிட்டதால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The post சென்னை மேற்கு மாம்பலத்தில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: