சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8-வது நாளாக ஆய்வு..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பெரியார் பல்கலை.க்கு ஒதுக்கிய நிதியில் உபகரணங்கள், மென்பொருள் உள்ளிட்டவை கொள்முதல் செய்ததில் முறைகேடு, ஊழல் நடந்துள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக நிதியில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததை அடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு குழுவினர் கடந்த 18-ம் தேதி முதல் சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை. நிதித்துறை அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை சிறப்பு ஆய்வு குழுவினர் 8-வது நாளாக ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: