கடற்கொள்ளையரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல், 19 பாகிஸ்தானியரை இந்திய கடற்படை மீட்டது

புதுடெல்லி: சோமாலியா கிழக்கு கடற்பகுதியில் கொள்ளையர்களிடம் இருந்து ஈரானிய மீன்பிடி கப்பல் மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர் கப்பல், சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்கள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழியாக ஈரான் கொடியுடன் வந்த கப்பல் மீது சோமாலியா கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா அங்கு விரைந்து ஈரான் கப்பல் மற்றும் அதில் இருந்த 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.

The post கடற்கொள்ளையரால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல், 19 பாகிஸ்தானியரை இந்திய கடற்படை மீட்டது appeared first on Dinakaran.

Related Stories: