ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை!!

ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். தனது இல்லத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மாநில தலைநகரை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்கண்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 7,000க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.

The post ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் ராஞ்சி இல்லத்திற்கு வருகை!! appeared first on Dinakaran.

Related Stories: