ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

புதுடெல்லி: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021ல் ரத்து செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் அமித் ஆனந்த திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ஆன் லைன் விளையாட்டால் தற்கொலை உட்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே சட்டத்திற்கு புறம்பான ஆன் லைன் விளையாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

The post ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: