வேன் மீது லாரி மோதல் வி.சி.க.வினர் 3 பேர் பலி

வேப்பூர்: திருச்சியில் நேற்றுமுன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு நடந்தது. இதில், கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வில்லியநல்லூர் பகுதியில் இருந்து முகாம் செயலாளர் வேல்முருகன் தலைமையில் 29 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் மாநாடு முடிந்து இரவு ஒரு வேனில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் அருகே அதிகாலை 2.50 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த புவனகிரி வில்லியநல்லூரை சேர்ந்த நாகேஸ்வரன் மகன் உத்தரகுமார்(29), அன்பழகன் மகன் அன்புசெல்வன் (23) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயகுமார் மகன் யுவராஜ் (17) என்பவர் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 27 பேர் காயமடைந்தனர்.

The post வேன் மீது லாரி மோதல் வி.சி.க.வினர் 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: