ஜன.7, 8-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார். ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிதிகளை சந்திக்கிறார். 10 நாட்கள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் செல்லும் முதல்வர் பிப்.7ல் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
The post வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.